மகிழினி தேவி

இவள் ஒவ்வொருவர்க்குள்ளும் இருக்கும் ஒரு மகிழ்ச்சி தேவி.நம் வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சனைகள் வரும் போகும் அவைகளை புன்னகைத்து கொண்டே சமாளித்து மீண்டு வரும் சக்தி கொடுக்கும் தேவி அவள்.


இவள் நமக்குள் உள்ளும் வெளியிலும் இருக்கும் கெட்ட சக்திகளை, தீயசக்திகளை புன்னகை செய்து கொண்டே வதம் செய்யும் தேவி அவள். கண்ணுக்கு தெரியும் தெரியா சத்ருக்களை கெட்ட சக்திகளை அச்சுறுத்தி அவைகளை வதம் செய்து தர்மத்தை நிலை நாட்டும் புன்னகை தேவி அவள்


பொதுவாய் சம்ஹாரம் என்றாலே தேவிகள் தெய்வங்கள் உக்கிர ரூபம் எடுப்பர் ஆனால் இந்த தேவி புன்னகைத்து கொண்டே ஆனந்த தாண்டவம் ஆடிகொண்டே கெட்ட சக்திகளை அசச்சுறுத்தி வதம் செய்யும் சக்தி படைத்தவள் .அதனால் தான் இவள் மகிழினி சம்ஹாரிணி தேவி என்று அழைக்கப்படுகிறாள்


இங்கு ஒரு சிறு பாடல் வரிகள் பகிர்ந்து உள்ளேன் அதையும் கேட்டு மகிழுங்கள்


நம்முள் உதித்த தேவி அவள் .மனம் என்னும் கோவிலுக்குள் ஆன்மா என்னும் தீபத்தால் அவளை வேண்டினாள் நிச்சயம் நமக்கு ஆதரவாய் இருப்பாள்



எழுதியவர்

சித்ராஜானகிராமன் (சோனியா ஜாரைக்கா )



கருத்துகள்

கருத்துரையிடுக